ஏஐ தொழில்நுட்பத்தை விவேகத்துடன் பயன்படுத்துவதுடன், இறுதி முடிவெடுப்பில் மனிதர்களின் தலையீடு மையமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய அரசின் செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இதில், உள்கட்டமைப்பு, இணைப்பு, பாதுகாப்பு, வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தரவுகள் தேசத்தின் சொத்து என்றும், வெவ்வேறு துறைகளில் தனித்தனியாக சேகரிக்கப்படுவதைத் தவிர்த்து, அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து தொலைநோக்கு சிந்தனையுடன் செயலாளர்கள் செயல்பட வேண்டும் என்றும், ஏஐ தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















