மின்சாரத் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களாக மின் கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில், லட்சக்கணக்கான மின் நுகர்வோருக்கு கட்டணம் உயர்ந்துள்ளதாக செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார். மேலும், பதவி உயர்வில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக கூறும் அரசு, மின்வாரியத்திலும் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், செந்தில்பாலாஜியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். பின்னர் அந்தக் கருத்தைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறியபோதும், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர் நிர்மல்குமாரை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு தரப்பினரும் மாறி மாறி பேசிய தேவையற்ற வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார்.
















