பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நலக் குறைவு காரணமாக, ராவல்பிண்டி அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் 800 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்ததும், இம்ரான் கான் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
















