கேரள மாநிலத்தின் பாரம்பரிய பெருமையை விளக்கும் ஓணம் பண்டிகை திருவனந்தபுரத்தில் உள்ள மக்கள் மாளிகையில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பல்வேறு பாரம்பரிய ஓணம் விளையாட்டு நிகழ்வுகளை ஆளுநர் பார்வையிட்டு, பொதுமக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
















