ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!
Apr 29, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விடவே, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி தனது ஆய்வை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.

இந்த ஆய்வறிக்கையை நவம்பர் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் பிறகும் தொல்லியல் துறை மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரியது.

ஆனால், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags: courtGnanavabi MosqueArchaeological Survey
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் ரஜினி – பிறந்த நாள் சிறப்பு பார்வை!

Next Post

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies