ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!
Jan 14, 2026, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விடவே, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி தனது ஆய்வை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.

இந்த ஆய்வறிக்கையை நவம்பர் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் பிறகும் தொல்லியல் துறை மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரியது.

ஆனால், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags: courtGnanavabi MosqueArchaeological Survey
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் ரஜினி – பிறந்த நாள் சிறப்பு பார்வை!

Next Post

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies