ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!
Nov 12, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் துறைக்கு மேலும் 1 வாரம் அவகாசம்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வழக்கில், அறிவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் அளித்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியானது, 17-ம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஒளரங்கசீப் காலத்தில் இந்து கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துக்கள் கூறிவருகின்றனர்.

இதுகுறித்து இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை எதிர்த்து மசூதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விடவே, மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்துமாறு கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 24-ம் தேதி தனது ஆய்வை இந்திய தொல்லியல் துறை தொடங்கியது.

இந்த ஆய்வறிக்கையை நவம்பர் 17-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், தொல்லியல் துறை கூடுதல் அவகாசம் கேட்டதால் நவம்பர் 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் பிறகும் தொல்லியல் துறை மீண்டும் 15 நாட்கள் அவகாசம் கோரியது.

ஆனால், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நவம்பர் 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. எனினும், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு வாரகாலம் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அடுத்த விசாரணையை டிசம்பர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags: Gnanavabi MosqueArchaeological Surveycourt
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் ஸ்டார் ரஜினி – பிறந்த நாள் சிறப்பு பார்வை!

Next Post

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

Related News

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு தொடர்பான பாகிஸ்தான் குற்றச்சாட்டு – இந்தியா மறுப்பு3!

திருப்பரங்குன்றம் மலை தீப தூணைச் சுற்றி தடுப்புகள் அமைத்த காவல்துறை – இந்து அமைப்புகள் கண்டனம்!

சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!

நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரி குறைப்பு சாத்தியமில்லை – நிர்மலா சீதாராமன்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை – நயினார் நாகந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

போட்ஸ்வானா சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

பீகார் சட்டப்பேரவை 2ம் கட்ட தேர்தல் – 68.79 % வாக்குப்பதிவு!

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies