குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!
Sep 12, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 01:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத்திகள் குறித்து அவதூறாகப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர்வது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர், லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ். இவர், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசினார்.

மேலும், குஜராத்திகள் மட்டுமே நாட்டில் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களது தவறுகள், மோசடிகள் மன்னிக்கப்படுகின்றன என்று கூறினார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஹரேஷ்பாய் பிராணசங்கர் மேத்தா என்பவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தேஜஸ்வி யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குஜராத்திகள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு தேஜஸ்வி யாதவ் மன்னிப்புக் கோரி இருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர வேண்டுமா என்று 29-ம் தேதிக்குள் புகார்தாரர் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேஜஸ்வி மன்னிப்புக் கேட்டிருப்பதால், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Tags: BiharTejashwi Yadav!GujratisDeputy CMapologiszed
Share
Tweet
SendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies