குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!
Sep 12, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறிகழிவுகளைக் கொட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அவ்வாறு கொட்டப்படும் காய்கறி கழிவுகள், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு, விவசாய பணிகளுக்காக உரமாக விற்கப்பட்டது. இந்த உரத்தை வாங்குவதற்காக விவசாயிகள் வரிசை கட்டி நிற்பார்கள்.

இப்படி விவசாய பணிகளுக்கு உபயோகமாக இருந்த அரியமங்கலம் குப்பை கிடங்கு, இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்கள் குவிந்து, காண்போரை முகம் சுளிக்க வைக்கிறது. திருச்சிமாநகராட்சிக்குச் சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கு சுமார் 48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஆனால், இதனை முறையாக மறுசுழற்சி செய்யாததால், 40 அடி உயரத்திற்கு குப்பை மேடாக உருவாகிவிட்டது.

வெயில் காலங்களில் இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், அதை அணைப்பதற்குள் தீயணைப்பு வீரர்களுக்குப் போதும் போதுமேன்று ஆகி விடும். இந்த நேரத்தில் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள், மூச்சு விடுவதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் உறவினர்கள் தஞ்சம் அடையும் சூழல் தான் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுபட்டதால், தோல் அலர்ஜி ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் குப்பைகள் போதாதென்று இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒருவேளை உணவு கூட நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை… குடிநீர் அருந்த முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் அரியமங்கலம் பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர்.

குப்பைக் கிடங்கு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், இதனால் ஜன்னலை மூடியே வைத்திருக்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

முதற்கட்டமாக இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்எனக் கோரிக்கை விடுத்துள்ள மக்கள், அரியமங்கலத்தில் இருந்து குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்றும் பணியில் அரசு இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: தேங்கும் இறைச்சி கழிவுகள்Tn newsமக்கள் அவதிMeat waste accumulating in landfills: People are suffering due to the stench
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

Next Post

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies