கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தையை கூண்டு பிடித்து வைத்துபிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அய்யர்பாடி ஜே.இ.பங்களா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அசாம் மாநில தம்பதியின் 5 வயது மகன் உயிரிழந்தார். இதையடுத்து வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவனின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் நிவாரண தொகையில், முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்றோரிடம் அதிகாரிகள் வழங்கினர். இதனிடையே வால்பாறையில் புகுந்துள்ள சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















