இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் - சிறப்பு தொகுப்பு!
Jun 29, 2026, 03:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தேசிய நலனுக்கே முன்னுரிமை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் மறைமுகமாக உக்ரைன் போருக்கு உதவுவதாக காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.

இந்தச் சுழலில், 23வது இந்திய ரஷ்ய உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின்,
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத முதன்மை சக்தியாக உள்ளது என்று பாராட்டியுள்ளார்.

மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நிலையாக, தடையில்லாமல் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம்,தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அவசியமான மற்றும் திறமையான போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் மோடியும் அதிபர் புதினும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருநாட்டு வர்த்தகத்தைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான செயல்திட்டத்தையும் வகுத்துள்ளனர்.

இந்நிலையில், பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், அதிபர் ட்ரம்பின் திறமையின்மையால் தான் ரஷ்ய அதிபர், இந்தியாவுடன் அதிக நெருக்கத்தைக் காட்டுவதாக 65 சதவீத அமெரிக்கர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகும் இந்தியா, அதற்கேற்ப எரிசக்தி தேவைகளையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மைக்கேல் ரூபின், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட கனிமங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்கா, இந்தியாவை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இந்திய உறவுகளை அதிபர் ட்ரம்ப் தலைகீழாக மாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் தாக்கத்தால், தவறான வெளியுறவுக் கொள்கைகளையே ட்ரம்ப் எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே அடுத்த ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை ‘முக்கிய கூட்டணி நாடாக அறிவித்துள்ள அமெரிக்கா, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அம்சமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக ரிக் ஸ்விட்சர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர முடிவு செய்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு நாள் இந்தியப் பயணம் உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புவி சார் அரசியலில் மையப் புள்ளியாக இருக்கும் இந்தியா உலக ஒழுங்கையே இதன் மூலம் மாற்றியுள்ளது .

Tags: russiaamericawashingtonkamala harrisDonald TrumpRepublican candidateMarylandFormer US Pentagon official Michael Rubinnobel russiaindia russia realtionIndia
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Next Post

வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Related News

உள்நாட்டு உற்பத்தியில் மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

அமைச்சர்களுக்கு எதிராக சபரீசன் நோட்டீஸ்; காரணம் என்ன ?

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies