உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அனைவரையும் பாராட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















