முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மீதான வழக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், ராஜ்மோகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், முரசொலியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் குறித்த கட்டுரை கண்டனத்திற்கு உரியது என்றும், சிவப்பு துண்டு போராளியை சிறுமை செய்தால் இரட்டை போர் யானை சும்மா இருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எ.வ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை எனவும், ஆதாரங்களின் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதாலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார்.
















