செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா - பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!
Jul 3, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் செஷல்ஸ் பயணம் அந்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரோந்து கப்பல், ராணுவ ஆலோசகர்கள் நியமனம் என இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

இந்திய பெருங்கடலில் தீவு நாடாக அமைந்துள்ள செஷல்ஸிற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றார். இந்தப் பயணம் வெறும் தூதரக சடங்காக இல்லாமல், இருநாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ச்சிப் பயணத்தில் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மை ஆகியவற்றில் ஒரு பெரிய விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செஷல்ஸ் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 4 ராணுவ ஆலோசகர்கள் நியமனம், தற்போதைய பயணத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவர்கள் 4 பேரும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நிறுவனங்களுடன் இணைந்து, திட்டமிடல் மற்றும் பயிற்சிப் பணிகளை மேம்படுத்த உள்ளனர். இந்த நடவடிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் செஷெல்ஸின் முதன்மையான பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எல்ஸ்போயர் ரோந்து கப்பல், 10 லேசர் ரேடியல் படகுகள், 5 ரோந்து வாகனங்கள் மற்றும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்களை செஷெல்ஸ் நாட்டிற்கு வழங்கியது இந்தியா. இதன் மூலம் அந்த நாட்டின் கடல் எல்லை கண்காணிப்பு மேலும் வலுவடையும். செஷெல்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு சொத்துக்களில் பாதிக்கும் மேல் இந்தியா வழங்கியவை. செஷெல்ஸ் ராணுவ வீரர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சியில் 70 சதவீதத்தை இந்திய ராணுவ கல்வி நிறுவனங்களே வழங்கி வருகின்றன.

இந்த இருதரப்பு கூட்டாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கும் பரிணமித்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழமாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்தியா – செஷல்ஸ் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.
செஷல்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் உணவு தேவைகளுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகியவற்றையும் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியா இனி செஷெல்ஸ் நாட்டிற்கு சாதாரண உதவி வழங்கும் நாடு அல்ல. மாறாக, அந்நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திர கை ஓங்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை…

Tags: patrol vesselSeychelles securityfour Indian military advisors'Lspoyer' patrol vesselIndian OceanPrime Minister Modi's visit.Seychelles
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

Next Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

Related News

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு – ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

திருவண்ணாமலை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

திருப்பூரில் ஏழு மூட்டை கடிதங்களை வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரம் – அசோக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கண்டன ஆர்பாட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies