51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் - சிறப்பு தொகுப்பு!
Sep 5, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விக்ரம்-1 ராக்கெட், நாட்டின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் பின்னால் உள்ள இஸ்ரோ முன்னாள் என்ஜினீயர்கள் குறித்து விரிவாக
பார்க்கலாம்…

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கிய பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோரின் பல ஆண்டுகால கனவும், கடின உழைப்பும்தான் இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் மைல்கல்லாக மாறியுள்ளது.

இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் பவன் குமார் சந்தனாவின் வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.

பள்ளியில் படித்தபோது கணிதப் பாடத்தில் வெறும் 51 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த சராசரி மாணவர்தான் பவன் குமார். அந்த மதிப்பெண் அவரது கனவுக்கு தடையாக இருக்கவில்லை. மதிப்பெண்களை விட ஆர்வம் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில், கடின உழைப்பால் ஐஐடி காரக்பூரில் இடம்பிடித்தார். அங்கிருந்து வளாகத் தேர்வு மூலம் இஸ்ரோவில் இணைந்தார்.

((GFX-IN)) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பவன் சந்தனா, இந்தியாவின் கனரக ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். வசதியாக மத்திய அரசு வேலையைத் தொடரலாம் என்ற வாய்ப்பு இருந்தும், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரை வேறு வழியில் அழைத்துச் சென்றது.

அதேபோல, ஐஐடியில் உயர் கல்வி முடித்து, விமானவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற நாகா பாரத் டாகாவுடன் இணைந்து, 2018-ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

ஐஐடி மெட்ராஸில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் முதுநிலை பட்டம் பெற்ற நாகா பாரத் டாகா, விமான வடிவமைப்பு, செமிகண்டக்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் போதிய அனுபவம் வாய்ந்தவர்.

ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன் பார்த்த அந்த நிறுவனம், இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. அண்மையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் ராக்கெட் உற்பத்தி நிலையத்தையும் ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ((GFX-OUT))

2022-இல் விக்ரம்-எஸ் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஸ்கைரூட், தற்போது விக்ரம்-1 மூலம் இந்தியாவை தனியார் விண்வெளி ஏவுதள திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் முன்னேற்றியுள்ளது. இந்த வெற்றியானது, இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.

ஒரு காலத்தில் கணிதத்தில் 51 மதிப்பெண்கள் எடுத்த மாணவர், இன்று இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு புதிய திசையைக் காட்டிய தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார்.

மதிப்பெண்கள் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால், வானம் மட்டுமல்ல, விண்வெளியும் எட்டக்கூடிய இலக்குதான் என்பதை பவன் சந்தனாவும், நாகா பாரத் டாகாவும் மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

Tags: Pawan Kumar ChandanaAndhra PradeshSriharikotaVikram-1 rocketSkyroot Aerospacefirst rocket developedformer ISRO engineersprivate Indian companyNaga Bharath Daka
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

Related News

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies