அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியும் வழங்கப்படும் எனவும்,
எம்எல்ஏக்களின் அலுவலகப் பணிகளில் உதவ ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள, மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் உதவியாளர் படியும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
















