மீனவர்களின் வாழ்வாதார இடமாக திகழும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களின் வாழ்வாதார இடமாக உள்ள பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் மிகப்பெரிய தோல்வி என்றும் விமர்சித்தார். சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கொசுக்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை எனக் கூறிய தமிழிசை, இதன் மூலம் அரசின் நிர்வாகத் திறன் வெளிப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
















