சீனாவின் தலைநகர் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. இயற்கை அழிவை அந்நகரம் எதிர்கொண்டுள்ளது. பெய்ஜிங், குறைந்தது 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை கண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் புதன் கிழமை காலை வரை 744.8 மில்லிமீட்டர் மழை (29.3 அங்குலம்) பதிவாகியுள்ளது. பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபே மாகாணம் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையினால் நீர் மட்டம் அபாயகரமான நிலைக்கு உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக நாட்டின் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகரைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஜுவாஜூ (ZhuZhou) நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்த இன்னும் முழு விவரம் இன்னும் வெளிவரவில்லை.
இயற்கையின் சீற்றம் காரணமாக 850,000 க்கும் மேற்பட்ட மக்களை நிவாரண மற்றும் மீட்பு முகாம்களுக்கு இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடைசியாக 1891 ஆம் ஆண்டில் நகரம் இவ்வளவு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் கூறியது.
ஜப்பானை புதன்கிழமை தாக்கிய கானுன் புயல், இந்த வார இறுதியில் சீனாவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த புயல் மணிக்கு 180 கிமீ வேகத்தில் மேற்பரப்புக் காற்று வீசுகிறது, மேலும் இந்த புயல் தைவானையும் தாக்கி வரலாறு காணாத மழையை கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு 44 மில்லியன் யுவான் ($6.1 மில்லியன்) வழங்குகிறது.
பொதுவாக, பெய்ஜிங்கில் வறண்ட கோடைகாலம் இருக்கும், ஆனால் இந்த ஆண்டு அது அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. தற்போது கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
Record-setting torrential rain in Beijing! Over 500 mm of rainfall in 24 hours! The weather station data has been interrupted, and the rainstorm is still going on! pic.twitter.com/DsSSogcM0D
— Jim yang (@yangyubin1998) July 31, 2023