செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!
Jun 18, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததோடு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அழைத்து வருவதற்காக சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அனுப்ப மறுத்து தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின் இடையே அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியிடம் தினசரி அதிகபட்சம் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து சாஸ்திரிபவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: senthil balaji it raiddmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajisenthil balaji house it raidsenthil balaji casesenthil balaji ed raidsenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housesenthil balaji latest
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

Next Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Related News

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் – பதாகைகளை ஏந்தியபடி கோஷம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் – சட்டப்பேரவையில் ஆளுநர் உரை!

சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்படும் – அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.14,000 கோடி அளித்துள்ளது – ரவிசங்கர் பிரசாத்

தவெகவில் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்!

முதல்வர் விஜய்க்கு எதிராக 3 தேர்தல் வழக்குகள் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

தவெகவுடன் மதிமுக கூட்டணி? – முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – ட்ரம்புடன் உடனான சந்திப்பு குறித்து மோடி பதிவு!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரதமர் மோடியும் உறுதியாக உள்ளார் – ட்ரம்ப

இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும – ட்ரம்ப் உறுதி!

ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர்; முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா ?

உலகின் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies