செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!
Oct 18, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததோடு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அழைத்து வருவதற்காக சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அனுப்ப மறுத்து தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின் இடையே அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியிடம் தினசரி அதிகபட்சம் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து சாஸ்திரிபவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: senthil balaji it raiddmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajisenthil balaji house it raidsenthil balaji casesenthil balaji ed raidsenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housesenthil balaji latest
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

Next Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Related News

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies