செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!
Jan 30, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததோடு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அழைத்து வருவதற்காக சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அனுப்ப மறுத்து தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின் இடையே அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியிடம் தினசரி அதிகபட்சம் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து சாஸ்திரிபவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: senthil balaji it raiddmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajisenthil balaji house it raidsenthil balaji casesenthil balaji ed raidsenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housesenthil balaji latest
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

Next Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Related News

விமான விபத்தில் அஜித் பவார் மரணம் : பனிமூட்டத்தால் நிகழ்ந்ததா? தொழில்நுட்ப கோளாறா? – சிறப்பு தொகுப்பு!

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை – ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்!

உலகளாவிய மேலாதிக்க சக்திக்கு சரியான பதிலடி : இந்தியா.- EU ஒப்பந்தத்தை வரவேற்ற கனடா – சிறப்பு தொகுப்பு!

EU உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக தொழில் வளர்ச்சி பன்மடங்கு உயரப்போகிறது – கோத்தாரி நிறுவன தலைவர் கணிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன? : “ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? – சிறப்பு தொகுப்பு!

போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்று முதல்வர் கூறுவதே இல்லை- நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் – பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்!

தேர்தல் நேரத்தில் போராடுவது ஃபேஷன் ஆகி விட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!

எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால்… கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் : கேண்டீன் மாஸ்டரிடம் போலீஸ் விசாரணை!

பொருளாதார ஆய்வறிக்கை : மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

மதுரை விமான நிலைய செயல்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை – ராம் மோகன் நாயுடு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies