செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!
Aug 22, 2025, 12:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததோடு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அழைத்து வருவதற்காக சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், சிறைத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அனுப்ப மறுத்து தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரவு 8 மணியளவில் சென்னை சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செந்தில் பாலாஜியை அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்றிரவு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.

விசாரணையின் இடையே அவ்வப்போது செந்தில் பாலாஜிக்கு ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதனையும் செய்திருக்கிறார்கள். இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியிடம் தினசரி அதிகபட்சம் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து சாஸ்திரிபவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: senthil balaji new housesenthil balaji latestsenthil balaji it raiddmk senthil balajiminister senthil balajisenthil balaji dmksenthil balaji arrestSenthil Balajisenthil balaji house it raidsenthil balaji casesenthil balaji ed raidsenthil balaji latest newssenthil balaji news
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் அரங்கம் ஆனது

Next Post

சந்திராயன் – 3 எடுத்த நிலவின் காணொளி: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies