காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென காவிரிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து, முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
பெங்களூரு, மைசூரு பெருநகரங்கள் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் வழக்கம் போல் இயங்கின. மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டன. அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளும் செயல்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். முழு அடைப்புப் போராட்டத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை கன்னட அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
















