சென்னையில் திருத்திய மதிப்பீடு அடிப்படையிலான சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வீடுகள், கட்டடங்களுக்கான சொத்து வரி அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சொத்து வரி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வரி மதிப்பீடு உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி, வட்டார துணை ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சென்னையில் திருத்திய மதிப்பீடு அடிப்படையிலான சொத்து வரி மாற்றியமைப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே வரி செலுத்தியவர்களுக்கு அந்த தொகை அடுத்தடுத்து அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















