தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மக்களவை எம்.பிக்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
















