புகழ்பெற்ற விஞ்ஞானி, இசைக் கலைஞரை சந்தித்த பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகழ்பெற்ற விஞ்ஞானி, இசைக் கலைஞரை சந்தித்த பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி, இசைக்கலைஞர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார். இம்மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, அந்நாட்டின் அதிபர் கத்ரினா சகெல்லரோபவுலு, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸையும் சந்தித்தார். இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸில் சில பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும், கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான சியாபுலேலா சூசாவை பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்திருக்கிறார். அப்போது, சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு, சூசா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், எரிசக்தியின் எதிர்காலம் மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.

அதேபோல, கிரீஸ் சென்ற பிரதமர் மோடி, கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை ஏதென்ஸில் சந்தித்திருக்கிறார். கான்ஸ்டான்டினோஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பையும், இந்திய இசை மற்றும் நடனத்தின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், கிரேக்கத்தில் இந்தியக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். தவிர, தமது மனதின் குரல் வானொலி உரையின் 95-வது நிகழ்ச்சியின் போது கான்ஸ்டான்டினோஸ் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸையும் ஏதென்ஸில் சந்தித்தார். அப்போது, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இச்சந்திப்பின்போது கிரீஸில் இஸ்கான் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது. அதேபோல, ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது, இந்திய மதங்கள், தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த தங்கள் பணிகள் குறித்து இருவரும் பிரதமரிடம் விளக்கினர். இந்திய மற்றும் கிரேக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்திய – கிரேக்க கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்கள் பற்றாக்குறை – பரிதவிக்கும் திருவண்ணாமலை பொதுமக்கள்!

Next Post

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies