புகழ்பெற்ற விஞ்ஞானி, இசைக் கலைஞரை சந்தித்த பிரதமர் மோடி!
Oct 19, 2025, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகழ்பெற்ற விஞ்ஞானி, இசைக் கலைஞரை சந்தித்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டுக்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி, இசைக்கலைஞர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசியிருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார். இம்மாநாட்டை முடித்துக் கொண்டு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது, அந்நாட்டின் அதிபர் கத்ரினா சகெல்லரோபவுலு, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸையும் சந்தித்தார். இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸில் சில பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும், கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான சியாபுலேலா சூசாவை பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்திருக்கிறார். அப்போது, சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு, சூசா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். மேலும், எரிசக்தியின் எதிர்காலம் மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவது தொடர்பான விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்திருக்கிறார்கள்.

அதேபோல, கிரீஸ் சென்ற பிரதமர் மோடி, கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை ஏதென்ஸில் சந்தித்திருக்கிறார். கான்ஸ்டான்டினோஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பையும், இந்திய இசை மற்றும் நடனத்தின் மீதான அவரது ஆர்வத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், கிரேக்கத்தில் இந்தியக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். தவிர, தமது மனதின் குரல் வானொலி உரையின் 95-வது நிகழ்ச்சியின் போது கான்ஸ்டான்டினோஸ் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸையும் ஏதென்ஸில் சந்தித்தார். அப்போது, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இச்சந்திப்பின்போது கிரீஸில் இஸ்கான் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது. அதேபோல, ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது, இந்திய மதங்கள், தத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்த தங்கள் பணிகள் குறித்து இருவரும் பிரதமரிடம் விளக்கினர். இந்திய மற்றும் கிரேக்க பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்திய – கிரேக்க கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மருத்துவர்கள் பற்றாக்குறை – பரிதவிக்கும் திருவண்ணாமலை பொதுமக்கள்!

Next Post

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Related News

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies