இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!
Jan 18, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் லக்னோவுக்குச் சென்றது!

Murugesan M by Murugesan M
Aug 28, 2023, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும், சிறப்பு விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா இரயில் பெட்டியில் 63 பயணிகள் பயணம் செய்தனர். இந்த இரயில் பெட்டி கடந்த 25-ம் தேதி அதிகாலை மதுரை இரயில் நிலையத்தில் உள்ள போடி இரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்தில் சிக்கியது. இதில் 9 பேர் உயிரோடு தீயில் கருகி பலியானார்கள். பலர் பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து இரயில்வே போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவன ஊழியர்களே, இரயிலில் சட்ட விரோதமாக, இரயில் பெட்டியில் சிலிண்டர், விறகு, அடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த லக்னோ அடுத்துள்ள சித்தாபூரில் உள்ள பாசில் என்ற டிராவல்ஸ் நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தீ விபத்துக்குக் காரணமான 2 சமையல் ஊழியர்களை கைது செய்தனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ. 3லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல், மதுரை அரசு மருத்துவனையில் உடற்கூராய்வு நடத்திய பின்னர், அவர்களது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து சிறப்பு விமானத்தில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதேபோல், உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், சிறப்பு விமானம் மூலம் லக்னோவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags: Air india
ShareTweetSendShare
Previous Post

மதுரை இரயில் விபத்து – தப்பியோடிய 2 பேர் கைது – சிக்கியது எப்படி?

Next Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடைந்த 4 வீரர்கள்!

Related News

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

கிராமத்திற்கு கார்களில் வந்து குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் – முதியவரின் செயலால் திருவிழா கோலம்

கிரீன்லாந்து விவகாரம் : எதிர்க்கும் நாடுகள் மீது சுங்கவரி..டிரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா – மாஞ்சா நூல் பட்டு 5,400 மேற்பட்ட பறவைகள் காயம்!

பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

தை அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies