தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 11:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவில் முதல் முறையாக தங்கம் வென்று இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு  2 பதக்கங்களே கிடைத்துள்ளது. 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

இந்த ஆண்டு, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இவர் மட்டுமல்லாமல் இந்தியாவின் கிஷோன் ஜீனா மற்றும் டிபி மனு ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது முயற்சியிலேயே 88.17 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இவருக்கு பின் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரத்திற்கு வீசினார்கள். தொடர்ந்து செக் குரியரசின் ஜேக்கர் வேட்லெச் 86.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். 2வது முயற்சி முதல் கடைசி முயற்சி வரையிலும் இந்தியாவின் நீரஜ் சோப்ராவே முன்னிலையில் இருந்தார்.

இதன் மூலம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்று, நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்களில் யாரும் தங்கம் வென்றதே இல்லை. அதனை மாற்றி, நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் .

காமன்வெல்த், ஆசியப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், டைமண்ட் லீக் போட்டிகள் என்று நீரஜ் சோப்ரா அத்தனை தொடர்களிலும் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் வெற்றியைத் தொடர்ந்து  அவருக்கு வாழ்த்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

Tags: indian sports personalityneeraj chopraworld athelecticsjavelin throwindia sports
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடைந்த 4 வீரர்கள்!

Next Post

சந்திரயான்-3 வெற்றி பெண் சக்திக்கான உயிர்ப்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies