ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!
Jan 24, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திகழ்ந்து வருவது திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில்.

இந்த திருக்கோவிலில், ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில், மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, அரிசி மாவு மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் மற்றும் அருகம்புல் ஆகிய பூக்களால் மாலை அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சங்கொலி முழங்க பஞ்சமுகத் தீபாராதனை நடைபெற்றது.

பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும், சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதனால், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும், நந்தியம் பெருமானையும் மனம் உருக தரிசனம் செய்தனர்.

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் தொடக்க விழா!

Next Post

ஹயக்கீரிவா் ஜெயந்தி: முத்து ஆபரணத்தில் ஸ்ரீ லெஷ்மி ஹயக்கீரிவா்!

Related News

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

டிரம்ப் முன்னிலையில் சுவிட்சர்லாந்தின் நடந்த சம்பவம் – கையெழுத்திட்ட உலக நாடுகள்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் – இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies