"விட்டா போதும் தொட்டு விடுவேன்": தயார் நிலையில் ஆதித்யா எல்-1!
Sep 13, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“விட்டா போதும் தொட்டு விடுவேன்”: தயார் நிலையில் ஆதித்யா எல்-1!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அதே நேரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் உருவாக்கி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவ தயாராகி விட்டது இஸ்ரோ.

செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்காக ஆதித்யா எல்-1 தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரோ, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அப்புகைப்படத்தில் ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தயார் நிலையில் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், ஆதித்யா எல்-1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1, 4 மாதங்கள் சுமார் 15 லட்சம் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, சூரியன் – பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே, சூரியனின் செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் ஏற்படும் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் ஆதித்யா எல்-1 மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Tags: aadithya l one
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கைக்கு 9 கோடி முட்டைகள்: இந்தியா ஏற்றுமதி!

Next Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies