"விட்டா போதும் தொட்டு விடுவேன்": தயார் நிலையில் ஆதித்யா எல்-1!
Jul 30, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“விட்டா போதும் தொட்டு விடுவேன்”: தயார் நிலையில் ஆதித்யா எல்-1!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை நோக்கிய பயணத்தை தொடங்குவதற்காக, ஆதித்யா எல்-1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் இஸ்ரோ, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கி வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அதே நேரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் உருவாக்கி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இதைக் கண்டு உலக நாடுகள் மூக்கில் விரல் வைத்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை ஏவ தயாராகி விட்டது இஸ்ரோ.

செப்டம்பர் மாதம் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதற்காக ஆதித்யா எல்-1 தயாராக இருப்பதாகக் கூறியிருக்கும் இஸ்ரோ, புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அப்புகைப்படத்தில் ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், தயார் நிலையில் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், ஆதித்யா எல்-1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் எல்லாம் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்-1, 4 மாதங்கள் சுமார் 15 லட்சம் கி.மீ. பயணத்திற்குப் பிறகு, சூரியன் – பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1ஐ சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடியே, சூரியனின் செயல்பாடுகள், விண்வெளி வானிலையில் ஏற்படும் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யும்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியில் ஆதித்யா எல்-1 மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Tags: aadithya l one
ShareTweetSendShare
Previous Post

இலங்கைக்கு 9 கோடி முட்டைகள்: இந்தியா ஏற்றுமதி!

Next Post

திருச்செந்தூர் ஆவணித்திருவிழா!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies