லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி - ரூ.3.50 லட்சம் பறிமுதல்
Jul 21, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில்  உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதா (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

அவர், பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, லஞ்ச பணத்தை, நேரடியாக வாங்கினால், சிக்கிக் கொள்வோம் என டிஜிட்டல் முறையில், அதாவது, ஜி பே, போன் பே மூலமாக மட்டுமே வாங்குவது வழக்கம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே, நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வாராம். இது தொடர்பான புகார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால், அவரைப்  பிடிக்க பொறிவைத்தனர்.

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்  தேவநாதன் தலைமையில் ஆய்வாளாகள் சுந்தரராஜன், திருவேங்கடம் ஆகியோர், விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ளே நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திய போது, உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் மனைகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தாரிடம் இருந்து, சங்கீதா லஞ்சம் பெற்றது தெரிய வந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர், உதவி பத்திரப் பதிவு அலுவலர் சங்கீதாவையும் அவருக்கு உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர் உதயகுமார் (வயது 37) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: policesub registerdavcanti corruptionviruthachalam police
ShareTweetSendShare
Previous Post

சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட மாவீரர் பூலித்தேவன்!

Next Post

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வீரன் : மாமன்னன் பூலித்தேவன்.

Related News

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies