நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாளை ராஜ்நாத் சிங் இலங்கை பயணம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 1, 2023, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

சீனாவின் போர்க் கப்பல் சமீபத்தில் இலங்கைக்கு வந்து சென்ற நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு 2 நாள் பயணமாக நாளை செல்கிறார்.

இந்தியா எவ்வளவுதான் உதவி செய்தாலும், சீனாவுக்கு சாதகமாகவே இலங்கை அரசு இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்புவில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசு தாரை வார்த்திருக்கிறது. மேலும், சீனாவின் போர்க்கப்பல்களும், உளவுக் கப்பல்களும் இலங்கையில் நிலைநிறுத்துவதற்கு அனுமதி அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவின் “யுவான் வாங்-5” என்கிற உளவுக்கப்பல் ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒருவாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, ஹம்பந்தோடா துறைமுகத்தில் இருந்தபடியே அக்கப்பல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சீனா “ஹையாங்-24” என்கிற போர்க்கப்பலை கொண்டு வந்து இலங்கையில் நிறுத்தியது.

இப்போது,வரும் அக்டோபர் மாதம் “ஷியான்-6” என்கிற ஆய்வுக் கப்பலை இலங்கையில் கொண்டு வந்து நிலைநிறுத்த சீனா திட்டமிட்டிருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று இந்தியத் தரப்பில் எவ்வளவோ வலியுறுத்தப்பட்டும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான், இரண்டு நாள் பயணமாக மத்திய இராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இலங்கைக்குச் செல்லவிருக்கிறார்.

இப்பயணத்தின்போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனே ஆகியோரைச்  சந்தித்துப் பேசும் ராஜ்நாத் சிங், உளவு மற்றும் போர்க்கப்பல் விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தைப் பதிவு செய்வார்

மேலும், இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்தும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

அதேபோல, இலங்கையின் மத்தியப் பகுதியான நுவரெலியா மற்றும் கிழக்குப் பகுதியான திரிகோணமலை ஆகிய இடங்களுக்கு நேரில் செல்லும் ராஜ்நாத் சிங், தமிழக மக்களையும் சந்திக்கிறார்.

மேலும், இலங்கையில் இந்தியா செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கும் ராஜ்நாத் சிங், 3-ம் தேதி பயணத்தை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்புகிறார்.

Tags: Rajnath Singhdefence minister
Share
Tweet
SendShare
Previous Post

நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் !

Next Post

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூறவே “என் மண் என் தேசம்”!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies