அவர்களது கவலை அவர்கள் வாரிசுகளைப் பற்றியே !
May 5, 2026, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவர்களது கவலை அவர்கள் வாரிசுகளைப் பற்றியே !

எதிர்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த ஜெ.பி.நட்டா.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்கட்சிக் கூட்டணித் தலைவர்கள் தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்புபவர்கள், நாட்டை அல்ல என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிர்தக் கலச யாத்திரையைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜெ.பி.நட்டா, “நேற்று மும்பையில் திரண்டவர்களை நீங்கள் பார்த்தீர்களா? அவர்கள் நாட்டை வளப்படுத்த வந்தவர்கள் அல்ல, தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்பும் தலைவர்கள். சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பற்றிக் கவலைப்படுகிறார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தற்போது அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பற்றிக் கவலைப்படுகிறார். மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி பற்றிக் கவலைப்படுகிறார். இப்படி அவர்களது கவலை எல்லாம் தங்களது வாரிசுகளைப் பற்றியதாகவே இருக்கிறது.

ஆனால், நாங்கள் அமிர்தக் காலத்தில் இருக்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதுதான் எங்களது கடமை. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலம், இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் ஜப்பானை விட முன்னணியில் இருக்கிறோம். அமிர்தக் கலச யாத்திரை என்பது வெறும் திட்டமல்ல. நாட்டு மக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் வீரவணக்கம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியதற்காக நமது விஞ்ஞானிகளை பாராட்டுவதோடு, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies