பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!
Jun 23, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்!

20-வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 6, 7-ம் தேதிகளில் இந்தோனேசியா செல்கிறார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்தோனேசியாவில் செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில், 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடும், 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் நடைபெறவிருக்கின்றன. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்திருக்கிறார். இதன் பேரில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இந்தோனேசியா செல்கிறார்.

இந்த மாநாட்டில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் 8 பேரும் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, பிரதமரின் இந்தோனேசிய பயணம், மேற்கண்ட 8 நாடுகளின் தலைவர்களுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கும். அதேபோல, இந்தியா – ஆசியான் நாடுகளின் உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, எதிர்கால ஒத்துழைப்பின் நிலையைப் பட்டியலிடும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இந்தியாவில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ஜி20 அமைப்பில் இந்தோனேசியாவும் ஒரு உறுப்பு நாடு. கடந்த ஆண்டு  ஜி20 அமைப்புக்கு இந்தோனேசியாதான் தலைமை வகித்தது. அப்போது, பாலி தீவில் நடந்து உச்சி மாநாட்டில்தான், இந்தியாவுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜகார்ததா சென்றிருந்தார். அப்போது, இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவைப் புதிய சகாப்தத்திற்குக் கொண்டு செல்வதற்காக, விரிவான மூலோபாய கூட்டுறவை ஏற்படுத்துவதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiindonesiaasean summit
ShareTweetSendShare
Previous Post

அவர்களது கவலை அவர்கள் வாரிசுகளைப் பற்றியே !

Next Post

ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் திடீர் ரத்து!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies