மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 11:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பு ‘தூய்மை’ பிரசாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூய்மை பிரசாரம் மத்திய அரசால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் துறை சார்ந்த அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற பொருட்கள் மற்றும் கோப்புகளை அகற்றுவது, நிலுவையில் உள்ள குறைதீர் மனுக்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்த ஆண்டுக்கான தூய்மைப்படுத்தும் சிறப்புத் தூய்மை பிரச்சாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவா் கூறுகையில், மத்திய அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதையும், நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ள மனுக்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டு சுமாா் 1.37 இலட்சம் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், 50 இலட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. அலுவலகங்களில் இருந்த பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டு, 172 இலட்சம் சதுர அடியிலான பரப்பு தூய்மைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளித்த 31.35 இலட்சம் குறைதீர் மனுக்களுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு, அகற்றப்பட்ட பழைய பொருட்களிலிருந்து ரூபாய் 520 கோடி வருவாய் கிடைத்தது. இந்த வருவாயை நடப்பாண்டில் ரூ.1,000 கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரத்தின் முன்னேற்பாடு நடவடிக்கையாகச் செப்டம்பர் 15 முதல் 30 வரை, தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அலுவலகப் பகுதிகள் கண்டறியப்படும். இந்தப் பணியை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செப்டம்பர் 14-இல் தொடங்கி வைப்பாா் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: bjp governmentswatch bharath
Share
Tweet
SendShare
Previous Post

கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர்

Next Post

திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies