மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!
Apr 29, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மை பிரசாரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 13, 2023, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு அலுவலகங்களைத் தூய்மைப்படுத்தும் சிறப்பு ‘தூய்மை’ பிரசாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூய்மை பிரசாரம் மத்திய அரசால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதன் துறை சார்ந்த அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையற்ற பொருட்கள் மற்றும் கோப்புகளை அகற்றுவது, நிலுவையில் உள்ள குறைதீர் மனுக்களுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்த ஆண்டுக்கான தூய்மைப்படுத்தும் சிறப்புத் தூய்மை பிரச்சாரம் அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி அக்டோபர் 31-ந் தேதி வரை நடைபெறும் என மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர் துறையின் செயலர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவா் கூறுகையில், மத்திய அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் தூய்மையாக இருப்பதையும், நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் உள்ள மனுக்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டு சுமாா் 1.37 இலட்சம் பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், 50 இலட்சம் கோப்புகள் அகற்றப்பட்டன. அலுவலகங்களில் இருந்த பயனற்ற பொருட்கள் அகற்றப்பட்டு, 172 இலட்சம் சதுர அடியிலான பரப்பு தூய்மைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அளித்த 31.35 இலட்சம் குறைதீர் மனுக்களுக்குத் தீா்வுகள் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு, அகற்றப்பட்ட பழைய பொருட்களிலிருந்து ரூபாய் 520 கோடி வருவாய் கிடைத்தது. இந்த வருவாயை நடப்பாண்டில் ரூ.1,000 கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரசாரத்தின் முன்னேற்பாடு நடவடிக்கையாகச் செப்டம்பர் 15 முதல் 30 வரை, தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அலுவலகப் பகுதிகள் கண்டறியப்படும். இந்தப் பணியை மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் செப்டம்பர் 14-இல் தொடங்கி வைப்பாா் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: bjp governmentswatch bharath
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியா மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முதல் இந்தியர்

Next Post

திருப்பதியில் மேலும் 5 சிறுத்தைகள் நடமாட்டம்.

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies