சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!
Jul 29, 2026, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி எச்சரிக்கை!

மத்தியப் பிரதேசத்தில் ரூ.50,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 06:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்கட்சிகள் சனாதனத்தை இன்று வெளிப்படையாகவே அழிக்க நினைக்கிறார்கள். நாளை நம் மீதும் தாக்குதல் நடத்துவார்கள். ஆகவே, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நர்மதாபுரம் மாவட்டத்தில் ‘மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம்’, இந்தூரில் 2 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், ரத்லமில் ஒரு மெகா தொழில் பூங்கா மற்றும் மாநிலம் முழுவதும் 6 புதிய தொழில்துறை பகுதிகள் என 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர், கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நிகழ்ச்சியின் மூலம் மாநில மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்கும், மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று 50,000 கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறோம். பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட இந்த திட்டங்களின் கூட்டுச் செலவு அதிகம். ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. இந்த மாநிலத்தை பல தசாப்தங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வறண்டதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாகவும் வைத்திருந்தது. மாநிலத்தின் பந்தல்கண்ட் பகுதியை தண்ணீர், மின்சாரம், சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்யாமல் விட்டுச் சென்றதை முந்தைய தலைமுறை மக்கள் மறந்திருக்கு மாட்டார்கள்.

ஆனால், இன்று பா.ஜ.க. ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மத்தியப் பிரதேசம் தொழில்மயமாக்கலுக்கு வரும்போது புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். நர்மதாபுரத்தில் உருவாக்கப்படும், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மண்டலம், இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய படியாக இருக்கும். அதேபோல, இந்தூரில் கட்டப்படும் தொழில்நுட்பப் பூங்கா 3 மற்றும் 4, மாநிலத்தின் ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ். துறைகளுக்கு உத்வேகத்தை அளிக்கும். மேலும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணி, நமது கலாச்சாரத்தை தாக்கும் மறைமுகமாக செயல்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்கிற தீர்மானத்துடன் இருக்கிறது இண்டியா கூட்டணி. பல லட்சம் ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்து வரும் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும் அழிக்க வெளிப்படையாகவே துணிந்து விட்டனர். நாளை நம் மீதான தாக்குதலையும் நடத்துவார்கள். ஆகவே, நாடு முழுவதும் இருக்கும் சனாதனிகளும், நாட்டை நேசிக்கும் தேசபக்தர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி, சனாதன தர்மத்தைக் காத்திட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Tags: 50 K croreprojectslays foundationPM ModiMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ். கூட்டம்: மோகன் பகவத், ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

Next Post

பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்: வி.கே.சிங் ஆவேசம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies