விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!
Jun 14, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி தடை போடுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு திடீரென வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்குச் சீல் வைத்தனர்.

பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற இரசாயனம் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகாரின் பேரில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், பல லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி சிலை செய்துள்ளதாக, சிலை செய்பவர்களும் கதறினர். ஆனாலும், அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், பலரும் விநாயகர் சிலை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்தன. இதற்காக, காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவும் முடிவு செய்யப்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மிகக் குறுக்கிய நாட்களே இருந்ததால், பாடாலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மொத்தம் 70 பேர் ஒன்று திரண்டனர்.

அவர்கள் அனைவரும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் செல்ல முயன்றனர். இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் சங்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies