விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!
Apr 29, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி தடை போடுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு திடீரென வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்குச் சீல் வைத்தனர்.

பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற இரசாயனம் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகாரின் பேரில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், பல லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி சிலை செய்துள்ளதாக, சிலை செய்பவர்களும் கதறினர். ஆனாலும், அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், பலரும் விநாயகர் சிலை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்தன. இதற்காக, காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவும் முடிவு செய்யப்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மிகக் குறுக்கிய நாட்களே இருந்ததால், பாடாலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மொத்தம் 70 பேர் ஒன்று திரண்டனர்.

அவர்கள் அனைவரும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் செல்ல முயன்றனர். இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் சங்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies