விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!
Jul 29, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: தடை போடும் அதிகாரிகள் – அதிர்ச்சி பின்னணி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முன்னெடுத்துச் செல்லும் அதே நேரத்தில், அதிகாரிகள் சிலர் அரசு விதிமுறைகளைச் சொல்லி தடை போடுவதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இங்கு திடீரென வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்குச் சீல் வைத்தனர்.

பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற இரசாயனம் கலவை கலந்து சிலை தயாரிக்கப்பட்டதாகப் புகாரின் பேரில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும், பல லட்சம் ரூபாய்க் கடன் வாங்கி சிலை செய்துள்ளதாக, சிலை செய்பவர்களும் கதறினர். ஆனாலும், அதிகாரிகள் தங்களது முடிவிலிருந்து மாறவில்லை. இதனால், பலரும் விநாயகர் சிலை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெரம்பலூரில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமரிசையாக நடத்த ஹிந்து அமைப்புகள் முடிவு செய்தன. இதற்காக, காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெறவும் முடிவு செய்யப்டப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மிகக் குறுக்கிய நாட்களே இருந்ததால், பாடாலூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மொத்தம் 70 பேர் ஒன்று திரண்டனர்.

அவர்கள் அனைவரும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் செல்ல முயன்றனர். இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரம்பலூர் சங்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

Tags: bjp
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

யோகா பயிற்றுநர்களாக மாறிய இராணுவ வீரர்கள்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies