ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்குத் தகுதி: டொமினிகா அமைச்சர்!
Jul 30, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்குத் தகுதி: டொமினிகா அமைச்சர்!

உலகளாவிய மிக முக்கியமான வீரர் என்றும் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா உலகளாவிய மிக மிக்கியமான வீரர். ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி இருக்கிறது என்று டொமினிகா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ் ஹென்டர்சன் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ‘உலகளாவிய தெற்குக்கான இந்தியா- ஐ.நா.: வளர்ச்சி டெலிவரிங்’ நிகழ்ச்சியில்
உரையாற்றிய டொமினிகன் வெளியுறவு அமைச்சர் வின்ஸ் ஹென்டர்சன், “இந்தியா வரலாற்று ரீதியாக மிகவும் கண்ணியமான நாடு என்பதை நான் அறிவேன். நீங்கள் சில விஷயங்களைச் சொல்லவோ கேட்கவோ மாட்டீர்கள். ஆனால், இந்தியா மிக முக்கியமான நாடாக உருவாகி வருகிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று நான் சொல்கிறேன். உலகளாவிய வீரர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம்பெற தகுதியானது என்று நாங்கள் நம்புகிறோம்.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மட்டுமல்லாமல், தனது சொந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பெரும் பொறுப்பை வெளிப்படுத்தும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஆகவே, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் முழு தகுதியும் இந்தியாவுக்கு இருக்கிறது. இது ஆதரிக்கப்பட வேண்டிய விஷயம் என்று நாங்கள் நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பான உறுப்பினராக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதேசமயம், சிறிய தீவு, வளரும் மாநிலங்களுக்கு ஒரு நல்ல நண்பராகவும் இந்தியா இருக்கும்.

இந்தியாவுடனான கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பினால் எமது நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது. பல ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. பல டொமினிகன்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். சுகாதாரம், கல்வி மற்றும் பிற வளர்ச்சித் துறைகளில் இந்தியா எங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி இருக்கிறது. ஆகவே, நாங்கள் இந்தியாவுக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

கொரோனா தொற்றுநோய்களின் போது டொமினிகாவுக்கு மட்டுமல்லாது கரீபியனிலுள்ள மற்ற உறுப்பு நாடுகளுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. இதை நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். ஹைட்டியை மீண்டும் கட்டியெழுப்ப வளர்ச்சிக்கான பாதையை வகுப்பதில் மற்ற சர்வதேச சமூகத்துடன் இந்தியா ஒரு பங்காளியாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் அங்குள்ள மக்களின் சில துன்பங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும். அந்த பகுதியில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

Tags: IndiaHailsdominicanforeign ministervince henderson
ShareTweetSendShare
Previous Post

பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது! – மோகன் பகவத் பெருமிதம்.

Next Post

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies