அரசு நிலங்கள் அபகரிப்பு! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
Apr 29, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு நிலங்கள் அபகரிப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு நிலங்கள் அபகரிக்கப்படுவதைத் தடுக்க உரியச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள 3.45 ஏக்கர் நிலம் ஹோட்டல் சரவண பவனுக்கு விற்கப்பட்டது. துரைசாமி நாயுடுவின் வாரிசிடம் இருந்து 1994 மற்றும் 1996 -ஆம் ஆண்டில் வெவ்வேறு விற்பனை ஆவணங்கள் வாயிலாக இந்த இடத்தை ஹோட்டல் நிர்வாகம் வாங்கியுள்ளது. மேலும் அந்த நிலத்தைக் கிராம நத்தம் என்றும் வகைப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் பவர் ஆப் அட்டனர்னி கொடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலத்திற்குப் பட்டா கேட்டு விண்ணப்பித்ததை அமைந்தகரை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிராகரித்தனர். சதுர அடி 12,500 அளவில் 3.45 ஏக்கர் நிலத்தையும் பாஷ்யம் கட்டுமான நிறுவனத்திற்கு மற்ற 2021 -ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை 2022 -ல் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், 2022-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணை ரத்து செய்து, தங்களது நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும் எனப் பாஷ்யம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில் தாங்கள் வாங்கியிருப்பது அரசு புறம்போக்கு நிலம் அல்ல எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூகத்தில் அதிக செல்வாக்கு உள்ள நபர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பில் இதுவும் ஒன்று. இதில் வருவாய் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.

அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தைப் பாஷ்யம் நிறுவனத்திற்கு, தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு முன்பு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறியதும் ஏற்கனவே வழங்கப்பட்டதை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு நிலங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, தண்டனை வழங்கச் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என நீதிபதி ஆலோசனை தெரிவித்தார்.

மேலும், நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் பொறுப்பான அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

Tags: madras high courtland grabbing casekoyambedu
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் டெங்கு – திணறும் மேற்கு வங்க அரசு

Next Post

இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies