கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!
Sep 12, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு மனிதன் எவ்வளவுதான் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனது மகிழ்ச்சியைக் கெடுக்கும் ஒரே ஒரு விஷயம் கடன்.

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று, கடனைப் போல பெரிய பிரச்சினை எதுவும் இல்லை, துக்கமும் இல்லை என்று கம்பர் பெருமான் மிக அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று நாட்டில் கடன் வாங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அந்த அளவுக்குத் திரும்பிய திசை எங்கும் வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் கடன் வாங்கியவர்கள், அதை உரியக் காலத்தில் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, வீடு கட்டவும், கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்கவும், இன்னும் பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கும் பலர் கடன் வாங்குகின்றனர். இன்னும் சிலரோ கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கண்ணில் பட்ட ஆடம்பரப் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, கடன் நமது கழுத்துக்கு மேலே சென்றால், கழுத்தை நெரிக்க ஆரம்பித்து விடும்.

முதலில் நாம் வாங்கும் கடன் சாதாரணமாகத்தான் தோன்றும். பின்பு அதுவே பழக்க தோஷமாக மாறி, எல்லாவற்றுக்கும் கடன் வாங்கும் தைரியத்தைக் கொடுத்து விடும். இப்படி கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து கடன் வாங்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுபவர்கள். ஒரு கட்டத்தில், மலை போல் குவிந்துவிடும் கடனால், வட்டிகூட கட்ட முடியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களும் உண்டு.

குறிப்பாக, கடன் வாங்கியவர்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. அது பற்றிய சிந்தனையே வாட்டி வதைக்கும். நமக்கு விடிவு காலமே பிறக்காதா? என்று புலம்புவார்கள். அவர்ளுக்கு எல்லாம் அருமருந்தாகவும், வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது திருச்சேறை திருக்கோவில். அதுவும் இந்த கோவில் தமிழகத்திலேயே உள்ளது. இக்கோவில், கும்பகோணத்திலிருந்து திருவாரூர் சாலையில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தேவராப் பாடல் பெற்ற இக்கோவில், காவிரி ஆற்றின் 127-வது திருத்தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு மூலவராக அருள்மிகு சாரபரமேஸ்வரரும், ஸ்ரீஞானம்பிகையாக தாயாக அம்பாளும் பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, கடன் பிரச்சனையைத் தீர்க்கும் கடவுளாக, ருணவிமோசன லிங்கேஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமை அன்று திருச்சேறை திருத்தலத்தில், காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. ஞான தீர்த்தத்தில் நீராடி ஈசனையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, ஸ்ரீருண விமோசன லிங்கேஸ்வரர் சன்னிதியில் ஈசனுக்கு 11 திங்கட்கிழமை தொடர்ந்து அர்ச்சனை செய்தும், 11 நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டால், எப்பேர்பட்ட கடனும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.

குறிப்பாக, அருள்மிகு ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின்னர், கஜலட்சுமியைத் தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோவிலில் 3 துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

எனவே, பக்தர்கள் திருச்சேறை திருக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், கடன் பறந்தோடும். கவலையை விடுங்க, திருச்சேறை புறப்படுங்க.

Tags: temple
Share
Tweet
SendShare
Previous Post

வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் – அதிர்ச்சி தகவல்!

Next Post

சாலையில் சுற்றித்திரியும் வெறி கொண்ட மாடுகளும், சென்னை மாநகராட்சியும்…!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies