தனியார் நிறுவனம் போல கட்சி நடத்தும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ்.: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Jun 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் நிறுவனம் போல கட்சி நடத்தும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ்.: பிரதமர் மோடி கடும் தாக்கு!

ஊழல் மற்றும் கமிஷனுக்கு பெயர் பெற்ற கட்சிகள் என்றும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 08:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், தனியார் நிறுவனம்போல நடத்தி வருகிறார்கள். இரண்டுமே ஊழல் மற்றும் கமிஷனுக்கு பெயர் பெற்ற கட்சிகள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை, இரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியத் துறைகளில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தெலங்கானா அரசு ஒரு கார். ஆனால், ஸ்டீயரிங் வேறு ஒருவரின் கையில் இருக்கிறது. தெலங்கானா மாநிலத்தின் முன்னேற்றம் இரண்டு குடும்பக் கட்சிகளால் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த 2 குடும்பங்களும் நடத்தும் கட்சிகள் ஊழல் மற்றும் கமிஷனுக்கு பெயர் பெற்றவை. மேலும், இந்த 2 கட்சிகளும் ஒரே ஃபார்முலாவைக் கொண்டிருக்கின்றன.

கட்சிதான் குடும்பம், குடும்பம்தான் கட்சி மற்றும் கட்சியே குடும்பத்திற்கானது என்பதுதான் அந்த ஃபார்முலா. மேலும், இவர்கள் ஜனநாயகத்தை குடும்ப வம்சமாக மாற்றுகிறார்கள். அவர்களின் கட்சி ஒரு தனியார் லிமிடெட் கம்பெனி போல் நடத்தப்படுகிறது. தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி, இயக்குனர், பொருளாளர், பொது மேலாளர், தலைமை மேலாளர் மற்றும் மேலாளர் என அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம், வெளியில் இருந்து சிலரை துணை ஊழியர்களாக வைத்திருக்கிறார்கள்.

சமீபத்திய ஆண்டுகளில், மக்களவை, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், தெலங்கானா மக்கள் பா.ஜ.க.வை பலப்படுத்தி இருக்கிறார்கள். இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டம் தெலங்கானா மாற்றத்தை விரும்புகிறது என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில், அது வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை விரும்புகிறதே தவிர, பொய்யான வாக்குறுதிகளை அல்ல. தெலங்கானா இப்போது பா.ஜ.க. ஆட்சியை விரும்புகிறது.

விவசாயிகளுக்கான திட்டங்களின் மூலம் மாநில அரசு பணத்தை சுரண்டி வருகிறது. பாசனத் திட்டம் என்கிற பெயரில் தெலங்கானாவில் ஊழல் நடந்திருக்கிறது. தெலங்கானாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பொய்யான வாக்குறுதிகளால் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் பிரச்னைகளில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. அதேசமயம், தெலங்கானாவில் எங்களது அரசு இல்லை. எனினும், விவசாயிகளுக்கு எல்லா உதவிகளையும் செய்தோம். பல ஆண்டுகளாக மூடப்பட்ட ராமகுண்டம் உர ஆலையை மீண்டும் தொடங்கினோம்.

முழுகு மாவட்டத்தில் 900 கோடி ரூபாய் செலவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு பழங்குடியின பெண் தெய்வங்களான சம்மக்கா சாரக்கா பெயர் சூட்டப்படும். இங்குள்ள ஊழல் அரசு இதில் ஆர்வம் காட்டியிருந்தால் இப்பல்கலைக் கழகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டி இருக்கலாம். பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கும் பணியை மாநில அரசு 5 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறது. பழங்குடியினர் நலனில் தெலுங்கானா அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடி மகபூப்நகரில் ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளமான பா.ஜ.க.வினர் சாலையின் இருபுறமும் வரிசையில் நின்று பிரதமர் மோடி மீது மலர் தூவி ஆரவாரம் செய்தனர்.

Tags: PM ModiCongressattackTelanganaBRS
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி வசூல்: ரூ.1.62 லட்சம் கோடி!

Next Post

ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies