காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
Jul 30, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

மக்களவைத் தலைவர், துணை குடியரசுத் தலைவரும் மலர் தூவி மரியாதை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் 154-வது ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டிலுள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் எல்.ஜி.சக்சேனா உள்ளிட்டோரும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது நினைத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காந்தி ஜெயந்தியான இந்த நன்நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் நமது பாதையை விளக்கிக் கொண்டே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேம்படுத்துவதற்கு மேலும் ஊக்கமளிக்கிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞரும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, எல்லா இடங்களிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…

— Narendra Modi (@narendramodi) October 2, 2023

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் தூய்மை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மேலும், ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு. ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் நடந்த தூய்மைப் பணி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiPresidentGandhi JeyanthiPays Homage
ShareTweetSendShare
Previous Post

கர்ம வீரர் காமராஜர் : நினைவு தினம் !

Next Post

சாஸ்திரி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies