விஹெச்பி யாத்திரைக்குத் தடை !
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஹெச்பி யாத்திரைக்குத் தடை !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 5, 2023, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பு சார்பில் நாடு முழுவதும் சௌர்ய ஜாக்ரன் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, இந்த யாத்திரை ஒரு சில மாவட்டங்களில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பைச் சேர்ந்த சந்தன் கைட்டி, அமித் பிரமானிக், தேப்ஜித்பார் ஆகிய 3 பேர் தனித்தனியாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், யாத்திரை அமைதியாகவும், உரியக் கட்டுப்பாடுகளுடன், சட்டத்திற்கு உட்பட்டும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

இந்த யாத்திரை இந்து மத்தின் மகிமைகளையும், அதன் புனிதத் தன்மைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல உள்ளது. இது ஒரு விழிப்புணர்வு யாத்திரை ஆகும்.

இந்த யாத்திரை மூலம் இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறவும், அவர்களைக் கௌரவப்படுத்தவும் இந்த யாத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த யாத்திரையில் அதிகபட்சம் 200 பேர் வரையிலும், 3 வாகனங்கள் மற்றும் 20 இரண்டு சக்கர வாகனங்களில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சென் குப்தா, யாத்திரைக்கு அனுமதி வழங்கினார். இந்த யாத்திரை அக்டோபர் 4-ம் தேதியான இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் 60 -ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில், இரண்டு பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடப்பதாக இருந்த பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன் ஜி, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: VHPVHP TAMILNADUbajrang dal
Share
Tweet
SendShare
Previous Post

ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Next Post

விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies