சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுப்பு?!
Aug 12, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுப்பு?!

ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் இருந்து பல்கலைக்கழகம் விலகியது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 8, 2023, 01:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடல் ஆராய்ச்சி தொடர்பாக சீன உளவுக் கப்பல் இம்மாதம் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல்கலைகழகம் திடீரென விலகி இருக்கிறது. இதையடுத்து, சீன உளவுக் கப்பல் இலங்கை வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்டை நாடான சீனா, மிகப்பெரிய கப்பல் படையை வைத்திருக்கிறது. அதேபோல, விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயர்களில் உளவுக் கப்பல்களையும் வைத்திருக்கிறது.

இக்கப்பல்களை அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி இந்தியாவை உளவு பார்த்து வருகிறது. அந்தவகையில், ஷின் யான் 1, 3, 6, ஷியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு வருகை தந்து வருகின்றன.

அதேபோல, கடந்த ஆகஸ்டு மாதம் ஷை யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதற்கு, இந்தியா கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஆனால், இலங்கையிலுள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனா 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருப்பதால், அந்நாட்டால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வரவிருப்பதாகவும், இக்கப்பல் 17 நாட்கள் ஹம்பந்தோடா துறைமுகத்தில் முகாமிட்டு, இலங்கை ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறையுடன் இணைந்து இலங்கை கடற்பரப்பில் கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு, சீனக் கப்பல் வருகைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தது.

காரணம், சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களால் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அந்த வகையில், இலங்கைக்கு மிகவும் அருகிலுள்ள இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இக்கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பிருக்கிறது.

எனவேதான், சீனக் கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதையடுத்து, கடந்த மாதம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, இலங்கை கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கவில்லை. இந்தியாவின் கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியிருந்தார். ஆனால், சீனக் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்து விட்டார். எனவே, ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி இருக்கிறது. இதன் காரணமாக, சீன உளவுக் கப்பல் இலங்கை வருகையில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், சீனக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: srilankachina shipResearch
Share
Tweet
SendShare
Previous Post

செம்பரம்பாக்கம் ஏரி கரையோர மக்களுக்கு திடீர் எச்சரிக்கை – என்ன காரணம்?

Next Post

பழனி ரோப் கார்!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies