காஸா மருத்துவமனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல: ஜோ பைடன்!
Jul 22, 2026, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஸா மருத்துவமனைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல: ஜோ பைடன்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்த பிறகு பேட்டி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 18, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான போர் 12-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றார். அவரை டெல் அவிவ் விமான நிலையத்திற்கே நேரில் வந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.

பின்னர், இருவரும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றனர். அப்போது, அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 1,400 பேர் பலியாகி விட்டனர். அக்டோபர் 7-ம் தேதி எங்களுக்கு மற்றொரு கருப்புநாளாக மாறிவிட்டது என்று ஜோ பைடனிடம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அதிபர் ஜோ பைடன் சொன்னதைப் போலவே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை விடவும் ஹமாஸ் மிகவும் மோசமானதாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, போர் தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களும் நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்கள். இதன் பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்.

காஸா பகுதியில் இருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மிகவும் வருத்தமும் அதிருப்தியும் அடைந்தேன். ஆனால், அது தொடர்பான விடியோக்களைப் பார்க்கும்போது, காஸா மருத்துவமனை மீதான தாக்குதலில் பிற அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. பிற குழுவினர் செய்தது போலவே தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இப்போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என்று விவரித்தவர், இஸ்ரேலின் பின்னால் அணி திரளுமாறு இதர நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

Tags: Joe BidenIsraelPM Benjamin netanyahuAmerica president
ShareTweetSendShare
Previous Post

தமிழகம்: சைபர் கிரைமில் பொதுமக்கள் ரூ. 425 கோடி இழப்பு!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்திய அணியின் நிலை !

Related News

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies