எம்எல்ஏ-க்களிடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரி – நடந்தது என்ன?
Sep 6, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எம்எல்ஏ-க்களிடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரி – நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி காலாப்பட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தை, செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை ஆணையர் என அறிமுகம் செய்து கொண்டதோடு, நேரில் சந்தித்துப் பேச வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அவரை அன்போடு வரவழைத்த எம்எல்ஏ தனது லாஸ்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய சொத்துக்கள் தொடர்பாக உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும், நீங்கள் எங்களைக் கவனித்தால் சோதனை நடக்காது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு, என்னிடம் எல்லாமே சரியாக உள்ளது. நீங்கள் சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என எம்எல்ஏ பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

எதுவும் தேறாது என்பதால், அங்கிருந்து புறப்பட்டவர், அடுத்து, லாஸ்பேட்டை எம்எல்ஏ வைத்தியநாதன் வீட்டிற்குச் சென்று இதே பல்லவியைப் பாடியுள்ளார். அவேரா, பணமே என்னிடம் இல்லை. நானே கஷ்டத்தில் இருக்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் கொடுத்துவிட்டு போங்கள் என்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேருவிடம் வலையை வீசியுள்ளார். அவரும் இதே பல்லவியைப் பாடி உள்ளார்.

இது என்னடா வம்பாபோச்சே என, ரெட்டியார் பாளையம் சிவசங்கரன் எம்எல்ஏ வீட்டிற்குச் சென்று தோரணையாக சென்று விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, அடையாள அட்டையை காட்டுங்கள் என கேட்க, திக்குமுக்காடிப்போனவர், அடையாள அட்டை இல்லை என சமாளித்துள்ளார்.

அதற்குள் வந்தவர் யார் என ஆடிட்டர் மூலம் ரகசியமாக விசாரிக்க, வந்த நபர் போலி அமலாக்கத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது.

இதையறிந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பதும், சென்னையிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் புதுச்சேரி வந்த வரதராஜன், உருளையன்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரு குடியிருப்பை நாள் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

மேலும், இவர் மீது திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுதான் ரூம் போட்டு ஏமாற்றுவது என்பதோ?

Tags: fake ed officermla home
Share
Tweet
SendShare
Previous Post

பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

இந்தியா – நியூசிலாந்து போட்டி : சிறந்த பீல்டர் விருது யாருக்கு ?

Related News

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies