ம.பி. சட்டமன்றத் தேர்தல்: களத்தில் 3,832 வேட்பாளர்கள்!
Jul 29, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ம.பி. சட்டமன்றத் தேர்தல்: களத்தில் 3,832 வேட்பாளர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இதையடுத்து, நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில்தான் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று மட்டும் 2,489 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் கடைசி நாளான நேற்று 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறுகையில், “2023-ம் ஆண்டுக்கான மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் 4,359 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். கடைசி நாளான நேற்று மட்டும் 2,489 பேர் 2,811 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத், அக்டோபர் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதேசமயம், தனது பாரம்பரியத் தொகுதியான புத்னியில் போட்டியிடும் தற்போதைய முதல்வர் சிவராஜ் சவுகான், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நவம்பர் 2 -ம் தேதி கடைசிநாளாகும்” என்றார்.

Tags: ElectionAssemblyMadya Pradesh3832 candidates
ShareTweetSendShare
Previous Post

முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக ரூ.400 கோடி கேட்டு மிரட்டல்!

Next Post

தேசிய ஜனநாயகக் கூட்டணியே 3 -வது முறையாக வெற்றி பெறும்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies