பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!
Jun 23, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும், 17-ம் தேதியும் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்கலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் ஜஷ்பூர் மாவட்டம் ராய்கரில் உள்ள லைலுங்காவில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, நட்டா பாரம்பரிய டிரம்மை வாசித்து மகிழந்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நட்டா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல் 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 12,000 ரூபாய் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது.

பொய்களைச் சொல்லி காங்கிரஸ் ஊழல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம், வஞ்சகம். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழல் இருக்கும் என்பதுதான் அவர்களின் அடையாளம். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது.

பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, 2027-28-ம் ஆம்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.

Tags: J.P.NaddaChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies