பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!
May 9, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய்களைச் சொல்லி ஏமாற்றும் காங்கிரஸ் அரசு: நட்டா கடும் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 6, 2023, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம்தான். பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும், 17-ம் தேதியும் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவி வருகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்கலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் ஜஷ்பூர் மாவட்டம் ராய்கரில் உள்ள லைலுங்காவில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அவரை வரவேற்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, நட்டா பாரம்பரிய டிரம்மை வாசித்து மகிழந்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய நட்டா, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல் 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு ஆண்டுக்கு தலா 12,000 ரூபாய் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி சுரங்கம் மற்றும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருக்கிறது.

பொய்களைச் சொல்லி காங்கிரஸ் ஊழல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி என்றாலே கொள்ளை, ஊழல், அட்டூழியம், வஞ்சகம். எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊழல் இருக்கும் என்பதுதான் அவர்களின் அடையாளம். ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முன்னேறி வருகிறது.

பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, 2027-28-ம் ஆம்டுக்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்” என்றார்.

Tags: J.P.NaddaChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

தர்மமே வெல்லும் என்ற தத்துவத்தை நிலைநிறுத்திய நீதியரசர்களுக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை!

Related News

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies