சிறப்பு அறிவிப்புகளுடன் ராஜஸ்தான் தேர்தல் அறிக்கை: 16-ல் நட்டா வெளியீடு!
Jun 23, 2026, 09:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறப்பு அறிவிப்புகளுடன் ராஜஸ்தான் தேர்தல் அறிக்கை: 16-ல் நட்டா வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உட்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகளுடன் தயாராகி இருக்கும் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 16-ம் தேதி வெளியிடுகிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு, மக்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சி ஏராளமான இலவச அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. எனவே, அதை விட சிறப்பான தேர்தலை அறிக்கையை தயாரிக்க பா.ஜ.க. ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இக்குழுவில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒருங்கிணைப்பாளர் கன்ஷ்யாம் திவாரி, இணை ஒருங்கிணைப்பாளர் கிரோடி லால் மீனா, மத்திய அமைச்சர் அல்கா சிங் குர்ஜார், முன்னாள் துணை சபாநாயகர் ராவ் ராஜேந்திர சிங், முன்னாள் மத்திய அமைச்சர் சுபாஷ் மஹரியா, பிரபுலால் சைனி, ரகில் ரத்தோர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் மாநிலம் முழுவதிலும் விண்ணப்பப்படிவங்களை வழங்கி சுமார் 1 கோடி பேரிடமிருந்து பரிந்துரைகளை சேகரித்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஆதரவு, மத ஸ்தல மேம்பாட்டிற்கான தேவநாராயண் திட்டத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்கிறார்கள்.

மேலும், மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா மற்றும் லாட்லி திட்டங்களின் கீழ் வரும் குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது உட்பட 60-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த தேர்தல் அறிக்கையை ராஜஸ்தானில் 16-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிடுகிறார்.

Tags: ElectionJ.P.NaddaRajastanManifesto
ShareTweetSendShare
Previous Post

அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையம்

Next Post

மியான்மர் வன்முறை : மிசோரமில் 5000 பேர் தஞ்சம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies