ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!
Sep 6, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் இருக்கும் இடமெல்லாம் காங்கிரஸ் ஆட்சி: அனுராக் தாக்கூர் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 03:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான். எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது. இதில், மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்டத் தேர்தலும் 7-ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.

தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான 2-ம் கட்டத் தேர்தலும் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “இம்மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் நவம்பர் 17-ம் தேதி நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

பல்வேறு ஊழல் வழக்குகளிலும் பூபேஷ் பாகேல் சிக்கி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சத்தீஸ்கர் மக்கள் பணத்தை கொள்ளையடித்து காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்பியதால் பூபேஷ் பாகேலை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
தவிர, காங்கிரஸ் கட்சியின் அடையாளமே வாரிசு அரசியல் மற்றும் ஊழல்தான்.

எங்கெல்லாம் ஊழல் இருக்கிறதோ, அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது. தற்போது ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் திணறி வருகின்றனர். காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளையே அளிக்கிறது.

5 வருடங்களாகியும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு காங்கிரஸ் பதிலளிக்கத் தவறியதால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்றார்.

Tags: Anurag ThakurChhattisgarh
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 36 பேர் பலி!

Next Post

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மறைவு!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies