தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!
Jun 24, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலங்கானா தேர்தல் அறிக்கை: அமித்ஷா நாளை வெளியீடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலத்தில் இம்மாதம் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வெளியிடுகிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7-ம் தேதி மிசோராம் மாநிலத்துக்கான தேர்தலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கும் 25-ம் தேதியும், தெலங்கானா மாநிலத்துக்கு 30-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கின்றன.

இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். இதில், 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், மாணவர்களுக்கு புத்தகம், பை வாங்க 1,200 உட்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் நாளை வெளியிடுகிறார். தொடர்ந்து, வாராங்கல், நால்கொண்டா, கத்வால் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் 4 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார்.

தெலங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கட்சி மீது தெலங்கானா மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். எனவே, இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க.வும், காங்கிரஸும் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன.

ஆகவே, பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ராஜஸ்தான் மாநில தேர்தல் அறிக்கையைப் போலவே பல்வேறு கவர்ச்சிகரமாக அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: bjpTelanganaAmit shaManifesto
ShareTweetSendShare
Previous Post

கோவை மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல்?

Next Post

கேரள செவிலியர் மரண தண்டனையை உறுதி செய்தது ஏமன் நீதிமன்றம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies