ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதி: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில தினங்களாக பிரதமர் மோடி ராஜஸ்தானில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் கரௌலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,

“நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள் கல்விக்காக கோட்டாவுக்கு வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவுகளை காங்கிரஸ் கட்சி பலமுறை அழித்துள்ளது.

அனைத்துத் தேர்வுகளுக்கும் வினாத் தாள்களை காங்கிரஸ் விற்றுள்ளது. வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம்.

கோட்டாவில் ஐ.ஐ.ஐ.டி. வளாகமும் திறக்கப்பட்டுள்ளது. 1 ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.300 என்றால், இன்றைய நிலையை கற்பனை செய்து பாருங்கள்? பா.ஜ.க. ஆட்சியில் டிஜிட்டல் புரட்சியால் நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

நான் பிரதமராவதற்கு முன்பு முன்பு இந்தியாவில் 2 மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தது. இன்று இந்தியாவில் 200 செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டது. இன்று 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை.

இதன் மூலம் பல நூறு கோடி நடுத்தர மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். டிசம்பர் 3-ம் தேதி ராஜஸ்தானில் ஆளும் கட்சி மாறும். அப்போது கோட்டாவின் விமான நிலைய கனவும் நனவாகும்.

ராஜஸ்தானில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸின் மந்திரவாதி மற்றும் டெல்லியைச் சேர்ந்த பாசிகார் ஆகியோர் பொய் சொல்வதில் வல்லுநர்கள். ராஜஸ்தானிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறுவது உறுதி. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்கள் மட்டுமே முதல்வர் நாற்காலியில் இருப்பார்” என்றார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து!

Next Post

கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies