ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!
Jul 28, 2026, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 30, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு நீதிமன்றம் மூலம் போராடி, வாதாடி அனுமதி பெற்றுத் தந்த சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்து வந்தன. எனவே, அந்த இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்றுத் தந்தனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் கடந்த 19-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி பெற்றுத் தந்த வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டில் அமைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திலுள்ள சக்தி அரங்கில் நடைபெற்ற விழாவில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.என்.ராஜா, ராஜகோபால், கார்த்திகேயன் உட்பட 79 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் ராஜேஷ் விவேகானந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மக்கள் தொடர்பு மாநில இணைச் செயலாளர் இராம இராஜசேகர் வரவேற்றார். மாநில அமைப்பாளர் பூ.மு.ரவிக்குமார் வழக்கறிஞர்களை பாராட்டி தொடக்க உரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைத்து வழக்கறிஞர்களும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளால் புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் பிறகு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவங்களையும், காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் எதிர்கொண்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ரபு மனோகர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 1925-ம் ஆண்டு முதல் சீருடை அணிவகுப்பை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகளில் வன்முறைகள் நடந்ததாக எந்த வரலாறும் இல்லை.

தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினார். ஆனால், 2021-ல் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித்தான் அனுமதி பெற வேண்டி இருக்கிறது.

இந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க. அரசின் காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நவம்பர் 19-ம் தேதி தமிழகத்தில் 53 இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தைத் தடுக்க தி.மு.க. அரசின் காவல்துறை அனைத்து அடக்குமுறைகளையும் கையாண்டது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளுக்கு 10-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் நள்ளிரவு நேரத்தில் சென்று அச்சத்தை ஏற்படுத்தினர்.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகள், வழிமுறைகளை பின்பற்றினோம். ஆனாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்தனர். நீதிமன்றம் அனுமதித்தும் இசைக் கருவிகளை வாசிக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மட்டுமல்லாது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். எவ்வித அடக்குமுறைக்கும் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. அரசு தரும் நெருக்கடிகளை பயிற்சியாக எடுத்துக் கொண்டு இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்ட இயக்கம்” என்றார்.

Tags: RSSAdvocates
ShareTweetSendShare
Previous Post

உஷார் – உஷார் ! – சென்னை கனமழைக்கு 2 பேர் பலி!

Next Post

அமலாக்கத்துறை மு.க. ஸ்டாலினை விசாரிக்க வேண்டும்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies