கென்யாவுக்கு ரூ.2,084 கோடி கடனுதவி: பிரதமர் மோடி!
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கென்யாவுக்கு ரூ.2,084 கோடி கடனுதவி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 6, 2023, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேளாண் துறையை நவீனமயமாக்குவதற்காக கென்யா நாட்டுக்கு இந்தியா சாா்பில் 2,084 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கென்யா. இந்நாட்டின் அதிபா் வில்லியம் சமோய் ருடோ, 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அதிபர் ருடோவின் முதல் இந்திய வருகை இது. அதோடு, கடந்த 6 ஆண்டுகளில் கென்ய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கள்கிழமை டெல்லியை வந்தடைந்த அவரை முக்கிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து, கென்ய அதிபர் ருடோ, பாரதப் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினாா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமா் மோடி, “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்துடனான தனது உறவுகளை விரிவுபடுத்தி இருக்கிறது.

இரு நாடுகளும் வேளாண் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், கென்யாவில் வேளாண் துறையை நவீனமயமாக்க 2,084 கோடி ரூபாய் கடனுதவியை இந்தியா வழங்கவிருக்கிறது. மேலும், மனித குலம் எதிா்கொண்டுள்ள மிகத் தீவிரமான சவால் பயங்கரவாதம் என்பதில் இந்தியாவும் கென்யாவும் ஒரே பாா்வையைக் கொண்டுள்ளன. எனவே, பயங்கரவாதத்தைத் தடுப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.

இப்பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளின் பாதுகாப்பு உற்பத்தித் தொழில் துறையை ஒருங்கிணைப்பதோடு, கூட்டு இராணுவப் பயிற்சிகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கென்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சுமாா் 80,000 போ், அந்நாட்டை தங்களது 2-வது வீடாகக் கருதுகின்றனர். ஆகவே, இருதரப்பு உறவின் மிகப் பெரிய வலிமையாக அவர்கள் திகழ்கின்றனா்” என்றார்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்தியா – கென்யா இடையே பாதுகாப்பு, வா்த்தகம், எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், கென்யாவில் சிறுதானியங்களை விளைவிக்கும் வகையில், அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இந்தியாவின் கடனுதவிக்காக கென்யா தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: PM ModiPresidentKenyaFund
Share
Tweet
SendShare
Previous Post

அம்பேத்கரின் நினைவு நாள்! – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

Next Post

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணாமலை உதவி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies