வெள்ளப் பாதிப்பு; முதல் கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு! - மத்திய அரசு
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளப் பாதிப்பு; முதல் கட்டமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு! – மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 02:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களிலும் தேங்கிய மழை நீர் தானாக வடிந்துவிட்ட போதும், எர்ணாவூர், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் இதுவரை வடியவில்லை. கழுத்தளவிற்கு மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

பல இடங்களில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், தாங்களாகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் மழை வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.450 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,

மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவை கடுமையாக பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

Severe cyclonic storm Michaung has affected Tamil Nadu and Andhra Pradesh. Though the extent of damage is varied, many areas of these states are inundated, thus affecting standing crops.

To help the state Governments with the management of relief necessitated by the cyclonic…

— Amit Shah (@AmitShah) December 7, 2023

பிரதமர் நரேந்திர மோடி புயலால் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற் கொள்ள, SDRF இன் 2வது தவணையின் மத்திய பங்கான ரூ.493.60 கோடியை ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) உத்தரவிட்டார்.

இரு மாநிலங்களின் முதல் தவணையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியிருந்தது.

பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம், விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Amith shachennai flood
Share
Tweet
SendShare
Previous Post

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

Next Post

வளைகுடா நாடுகளுக்கு செல்ல ஒரே விசா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies